இந்தியாவில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது! கவர்ச்சி நடிகையின் அதிரடியான கருத்து!

  • நடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து.
  • எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது.

நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தனது இணைய தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, பலரை தன் வசம் கவர்ந்திழுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில்  நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது. வன்முறை ஒருவரை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும். இன்றைய இந்தியாவில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் அவர் கூறுகையில், வன்முறையில் ஈடுபடாமல் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.