தீவிரவாதிகள் ஊடுருவல்……மின் வேலிகளை சீரமைக்க பாதுகாப்புப்படை கோரிக்கை…!!

குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் மின் வேலிகளை சீரமைக்க வேண்டுமென்று எல்லை பாதுகாப்புப்படை சார்பில் தெரிவித்துள்ளது.
2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.மத்திய அரசிடம் எல்லை பாதுகாப்பு படை சார்பில் அறிக்கை ஓன்று வழங்கப்பட்டது.அந்த அறிக்கையில் குஜராத் மாநிலம் புஜ் மற்றும் காந்திநகர் பிரிவில் உள்ள எல்லை பகுதியில் உள்ள 2, 061 எல்லை வேலி மின் கம்பங்களில் சுமார் 616 மின் கம்பங்கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் எல்லையில் உள்ள வேலிகளை வெட்டி, பாகிஸ்தான் தீவிரவாதிகள், அடிக்கடி ஊடுருவுகின்றனர்.எனவே தீவிரவாதிகள் ஊடுருவலை   தடுப்பதற்கு , வெட்டப்பட்ட அனைத்து மின் வேலிகளையும் சீரமைக்க வேண்டுமென அந்த அறிக்கையில் பாதுகாப்புப்படை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment