சாத்தான்குளம் வழக்கு..காவலர் தாமஸுக்கு இடைக்கால ஜாமீன்..!

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் தாமஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தாமஸ் பிரான்சிஸ் தந்தை உயிரிழந்ததால் அக்டோபர் 19-ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் விவகாரத்தில் 10 காவல்த்துறை கைது சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், சமீபத்தில் காவலர் பால்ராஜ் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan