சபரிமலை : தந்தையுடன் வந்த 12 வயது சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்..!

சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு  பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின்  கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.
அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நீதிமன்றத்தின் அனுமதி கொடுத்த பிறகே கேரளா போலீசார் சபரிமலைக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.அனுமதி இல்லாமல் வரும் பெண்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தை சார்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன்   இருமுடி கட்டிக்கொண்டு வந்து உள்ளார். பம்பை சோதனையில் இருந்த போலீசார் அந்த சிறுமியை பார்த்ததும் அடையாள அட்டையை பரிசோதனை செய்தனர்.
அதில் அந்த சிறுமிக்கு 12 வயது நிரம்பியது தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் சிறுமியை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.தந்தை எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் சிறுமி கீழே உள்ள முகாமில் தங்கியிருக்கலாம் மற்றவர்கள் சபரிமலை சென்று  வரலாம் என போலீசார் கூறினர். இதற்கு முன் 16-ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை பம்பையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல நேற்று காலை நிலக்கல்லில் 2 பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

author avatar
murugan