உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்..!

உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ. பாப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவியில் நீடிப்பார். பாப்டே 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.பாப்டே 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பாப்டே உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan