திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது, டயர் வெடித்து கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள் மற்றும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.