சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்” – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

  • தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது
  • அதனோடு சேர்த்து 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன.

தற்போது ஒப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிவடைந்த நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் நேற்று அறிவித்தார். இந்த மூன்று தொகுதிகளும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment