ரஜினி கட்சி தொடங்கிய பின்னர்தான் கருத்து சொல்ல முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி கட்சி தொடங்கிய பின்னர்தான் கருத்து சொல்ல முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,நடிகர் ரஜினிகாந்த் தனது லட்சியங்களையும், கொள்கைகளையும் கூறியுள்ளார்.அவர் கட்சி தொடங்கினால்தான் அது குறித்து கருத்துக் கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.