ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார்,கட்சியும் தொடங்கமாட்டார்- திருமாவளவன்

மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த்  தெரிவித்தார்.இவரின் இந்த கருத்துக்கு பலரும் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ரஜினி பொது வாழ்க்கைக்கு வரப்போவதில்லை .அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதையாக இருக்கிறது.ச‌ரிசெய்து விட்டு வருவது என்றால் எந்தக் காலத்திலும் வர முடியாது.அரசியலில் இறங்கித் தான் சரிசெய்ய முடியும். ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை , கட்சி தொடங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.