தமிழகத்தில் அடுத்த  இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த  இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.