வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுல் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் 3 நாள் சுற்று பயணமாக கேரள மாநிலம் மலப்புரம் சென்றடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.பின் மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராகுல் காந்தி.