மழை வேண்டி பூஜை , யாகம் செய்ய வேண்டும் – அமைச்சர்களுக்கு அதிமுக தலைமை கட்டளை!

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அமைச்சர்கள் கோவில்களில் பூஜை மற்றும் யாகம் செய்ய வேண்டும் என்று அதிமுக கட்டளையிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னிர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் அதனால் மக்கள் அவதியுறாமல் இருக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைச்சர்கள் ஆகியோர் மஹாயாகம் மற்றும் பூஜை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.