அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிரதமர் மோடி பார்வை !

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், நேற்று மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால்  மரங்கள், மின் கம்பங்கள், வீடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

மேலும், கொல்கத்தா விமான நிலையமே நீரில் மூழ்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளதாக விமான நிர்வாகம் தரப்பில்  தெரிவித்துள்ளது. இந்த புயலால்  72 பேர் உயிரிழந்ததாக  அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார்.

இதையடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.

author avatar
Dinasuvadu desk