தன் வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்துடன் போராடிய வீர பெண்மணி!

  • தன்னுடைய செல்ல நாயை கடித்து குதறிய சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்த பெண். 
  • சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியடித்துள்ளார். 
  • இதே போல சில நாட்களுக்கு முன்னர் வேறொருவர் வீட்டு நாயையும் சிங்கம் கடித்து குதறியுள்ளது.

அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தந்து வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியுள்ளார்.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து வட மேற்கில் இருந்து 35 மைல் தொலைவில் அந்த இடம் இருந்த்துள்ளது. அங்கு அப்பெண்ணின் வீட்டில் பின்புறத்தில் அப்பெண் வளர்த்து வந்த செல்ல நாயை ஒரு காட்டு சிங்கம் கடித்து குத்தறியுள்ளது.

இந்த சத்தம் கேட்டு வந்த அந்த பெண் தனது செல்ல பிராணியை தாக்கிய அந்த காட்டு சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதியில் அந்த சிங்கத்தின் முகத்தில் குத்தி அசிங்கத்தை விரட்டியுள்ளார்.

இது குறித்து போலீசார் காட்டிற்குள் ஓடிய அந்த  சிங்கத்தை தேடி வந்தனர். மேலும் காயம்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.