கொரோனா: மேற்கு வங்காளத்தில் உயிரிழப்பு 2 ஆக உயர்வு .!

இந்தியாவில் கொரோனா  வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம்  பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா  உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் 19 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்து இருந்த நிலையில் மேற்கு வங்காளம் சிலிகுரியில் உள்ள மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் கலிம்பொங்கைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார் என ஏ.என் ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

இதனால் மேற்கு வங்காள மாநிலத்தில் உயிரிழப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
murugan