டெல்லி,ராஜஸ்தான்,பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கடும் பனிமூட்டம்!விமானம்,ரயில் சேவை பாதிப்பு…..

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. அதேபோல், 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 24 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
source: dinasuvadu.com

Leave a Comment