புதிய கல்வி கொள்கை ! அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.

அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  புதிய கல்வி கொள்கை குறித்து  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.பின்னர் அவர் பேசுகையில், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை ஆகும். புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் .புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.