வாரண்ட் கேட்டதற்காக கண்டக்டரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்காரர்!

திருநெல்வேலி – நாகர்கோயில் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில், ஆயுதப்படை காவலர்களான, மகேஸ்வரன், தமிழரசன் என்பவர்கள் கூடங்குளம் செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துனர் வாரண்ட் கேட்டுள்ளார்.

இருவரும் வாரண்ட் எழுத லேட் ஆனதால், நடத்துனர் ரமேஷ்நருக்கும். காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி, காவலர்களின் ஒருவர் நடத்துனரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நடத்துனருக்கு கண்ணின் அருகில் அடிபட்ட்டு ரத்தம் வெளியானது இதனை தொடர்ந்து அந்த நடத்துனர் அருகில் உள்ள மூன்றடைப்பு காவல்நிலையத்தில், இரு காவலர்கள் மீதும் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த காவலர்களும் நடத்துனர் மீது புகார் அளித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.