விருது விழாவிற்கு பட்டு புடவையில் வந்து கலக்கிய நயன்தாரா.!

  • சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது.
  • இந்த விருது விழாவில் நயன்தாராவிற்கு 2 விருதுகள் கொடுக்கப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது.இதில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ் ,நயன்தாரா, தனுஷ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்க்கும், சிறந்த காமெடி நடிகருக்கான விருதை நடிகர் யோகிபாபும் ,சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கினார்.

Image

மேலும் விஸ்வாசம் மற்றும் பிகில் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கும் ஒரு விருதும் ,மறைந்த ஸ்ரீதேவி பெயரில் இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருது என 2 விருதுகள் நடிகை நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டது.

Image

இந்த விருது விழாவிற்கு நடிகை நயன்தாரா ,காதலன் விக்னேஷ் சிவன் அழைத்து வரவில்லை. அது மட்டுமல்லாமல் விருது விழாவிற்கு புடவையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

 

author avatar
murugan