அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?

தமிழகத்தில் தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ள துரைக்கண்ணுவிற்கு கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துரைக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளது. எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் துரைக்கண்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan