இமாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு! சேதம் ஒன்றுமில்லை!

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரஸ் நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. உலக நாடுகளே கொரோனா வைரஸின் தாக்குதலால் அச்சத்தில் உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவு ஆகியுள்ளது. நில அதிர்வானது நண்பகல் 12.17 மணிக்கு ஏற்பட்டதாகவும், இது குறித்து எந்த சேதமும் ஏற்படவில்லை  என்றும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.