BREAKING: கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு .!

BREAKING: கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு .!

கொரோனா இல்லாத மாவட்டமாக  ஈரோடு மாறியதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாள்களாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 16 -ம் தேதி கொரோனாவால் முதல் நபர் பாதிக்கப்பட்டார். இதையெடுத்து  ஈரோட்டில் கொரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனால், தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக   ஈரோடு மாறியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube