மெல்போர்ன் டெஸ்ட் போட்டி : இந்தியா அபார வெற்றி….!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது. 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என முன்னிலை வகுக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment