கே.எல் ராகுல் விக்கெட்டை பறித்து உலகக்கோப்பையில் மூன்றாமிடம் பிடித்த மலிங்கா!

நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியும் ,இந்திய அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில்  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் விளாசினார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா  அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி உலக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மலிங்கா  இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 55 விக்கெட்டை வீழ்த்தி வாசிம் அக்ரம் சாதனையை சமன்செய்து இருந்தார்.நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்.

71 – க்ளென் மெக்ராத்
68 –  முத்தையா முரளிதரன்
56 –  லசித் மலிங்கா
55 – வாசிம் அக்ரம்
49 –  சாமிந்த வாஸ்

author avatar
murugan