மக்களவை தேர்தல்: வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று  சென்னையிலிருந்து 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தேர்தலில் வாக்களிக்க வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று  சென்னையிலிருந்து 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 18 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால்  தேர்தலில் வாக்களிக்க வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று  சென்னையிலிருந்து 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Leave a Comment