கங்குலி கேட்டதற்கு மூன்றே வினாடியில் சம்மதம் சொன்ன கோலி – இது தாதா ஸ்டைல்

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மூன்றே வினாடிகளில் சம்மதம் சொன்னார் கோலி என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.இதற்கிடையில் வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி  இன்று டெல்லியில் உள்ள  மைதானத்தில்  நடைபெறுகிறது.
இந்தநிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் கங்குலி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில் வங்கதேசத்துடனான  தொடருக்கான இந்திய அணி தேர்விற்கு முன்னர் விராட் கோலியுடன் பேசினேன்.அவரிடம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் அவசியம் என்று கூறினேன்.இதற்கு அவர் மூன்றே வினாடிகளில் சரி என்று சொன்னார் என்று கூறினார் கங்குலி.