BREAKING : காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேற்றம்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா   ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின்  சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு மாநிலங்களவையில் பெரும் விவாதம் ஏற்பட்டது .மேலும் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதே காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என அமித்ஷா கூறினார்.

இதை தொடர்ந்து காஷ்மீர்  பிரிப்பு மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இதனையடுத்து  ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது .சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மசோதாவிற்கு  ஆதரவாக 125  வாக்குகளும்  எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.

author avatar
murugan