கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக மைசூரு ,மங்களூரு.குடகு,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மற்றும் ராணுவம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.