கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு

Default Image

இன்று  கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார்.மீதமுள்ள  16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. 

இதற்கு இடையில் தான் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று  பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் மத்தியப்பிரதேச சட்டப்பேரவை  கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்   இன்று  கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர்  தெரிவித்துள்ளார்.இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனில் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Join our channel google news Youtube