டாஸ்மாக் மூலம் மக்கள் உயிரை பறிக்கும் அடிமை அரசு.! கமல்ஹாசன் காட்டம்.!

மத்திய அரசின் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இதனை சரிசெய்ய பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி எதற்கெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.   

இந்த 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 20 லட்சம் கொடியில் தமிழகத்திற்கு என்ன பயன்? நிதியுதவியை நியாமாக கேட்காமல், டாஸ்மாக் திறந்து மக்களின் உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கும் இந்த அரசு அம்மா அரசு இல்லை அடிமை அரசு என பதிவிட்டுள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில், ’20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.’ என பதிவிட்டுள்ளார். 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.