இருமடங்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பள உயர்வு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம், தற்போது வழங்கப்பட்டு வரும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆவது ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment