ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷின்சோ அபே மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமாராகிறார். முதல் முறையாக கடந்த 2009 முதல் 2010 வரை பிரதமராக இருந்த அவர் மீண்டும் 2012-ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
ஷின்சோ அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சி ஜப்பான் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.
இந்நிலையில், கட்சித் தலைவர் பதவிக்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் ஷின்சோ அபேவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகேரு இஷிபாவும் ((Shigeru Ishiba)) போட்டியிட்டனர்.
இதில் மொத்தமுள்ள 807 வாக்குகளில் 553 வாக்குகளைப் பெற்று ஷின்சோ அபே வெற்றிபெற்றார். இதன்மூலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ள ஷின்சோ அபே நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
DINASUVADU