IPL 2018:முதல் வெற்றியை முத்தமிடுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?பஞ்சாப்புடன் மோதல் …!

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணிகள்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

 

பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியில் லோகேஷ் ராகுல், மயங்கி அகர்வால், யுவராஜ்சிங், கருண் நாயர், டோலிப் மில்லர், ஸ்டோன்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஆந்த்ரே டை, அச்சரி பட்டேல், மொதிக் சர்மாமுஜிப் ரஹ்மான் உள்ளனர். பஞ்சாப் பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

பெங்களூர் அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தா விடம் தோற்றது. அந்த அணியில் கோலி, மெக்குல்லம், டிவில்லியர்ஸ், டி காக் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.

பந்துவீச்சிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த குறைகளை சரி செய்வது அவசியமாகும். பெங்களூர் முதல் வெற்றியை நோக்கி காத்திருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment