காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் , ஐ.என்.எக்ஸ் வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருறோம். எனவும்  தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். ஐ.என்.எக்ஸ் வழக்கில் என் மீதும், எனது குடும்பத்தின்  மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என கூறினார்.