#Breaking : கொரோனா எதிரொலி ! தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டு ஒரு நாள் போட்டிகளும் ரத்து

கொரோனா  காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  விளையாடுகிறது.

கடந்த 12 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது.இதன்  காரணமாக மைதானத்தில் ஈரப்பதம்  இருந்தது.இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி  ஒரு பந்துகூட வீசப்படமால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடைசி 2 ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.15-ஆம் தேதி லக்னோவிலும்,18-ஆம் தேதி கொல்கத்தாவில் 2-வது மற்றும் 3-வது போட்டி நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.