படத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும்! அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்

நடிகர் ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள. சஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இதுதான் எனது முதல் படம் என்றும், சமீபத்தில் தமிழில் அருவி படத்தில் நடித்துள்ளேன். எப்போதும் நான் படப்பிடிப்லேயே இருப்பதால், என்னால் நிறைய படங்களை பார்க்க முடிவதில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சாஹோ படத்திற்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடய அதிஷ்டம் என்றும், கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அதிலும் நடிகர் பிரபாஸ் நடிக்கிறார் என்றதும் எனக்கு மிகவும் பிடித்து போனது என்று கூறியுள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், இப்படம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றும், முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது மிகவும் கடினமாக இருந்தது என்றும், படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும், அதன் நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.