அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு …! சென்னை  வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.அதேபோல்   சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment