தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாக தான் பேசுவேன் : கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு வரவேற்புகள் குவிந்து வந்தாலும், எதிர்ப்புகளும் எழும்பியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், கமலஹாசன் அவர்கள், தீவிரவாதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால், தீவிரமாக தான் பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment