முதல்வரே உங்களது அரசு சரியாக செயல்படவில்லை என்றால் குண்டாஸை நாடு வேண்டியிருக்கும் – மீரா மிதுன்.!

மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து. அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். இதற்கு உங்களது அரசு சரியாக செயல்படவில்லை என்று கேட்டுள்ளார்.

மீரா மிதுனை பயனாளி ஒருவர் மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்துள்ளார். அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். மேலும் இதை போன்ற ஆபாசமான முறையிலான பிரச்சினைகளே சினிமா பிரபலங்களில் நான் மட்டுமே எதிர் கொள்கிறேன் என்றும், இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பதிவு செய்துள்ளார் இனியாவது இது போன்ற சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமரிடம் இதை சொல்ல வருந்துகிறேன், போலீஸ் அவர்களது வேலையை செய்யவில்லை என்றாலோ, சட்டம் செயல்படவில்லை என்றாலோ, அந்த குற்றவாளி எனக்கு பிரச்சினைகள் உருவாக்கினாலோ உண்மையிலே நான் எனது உதவிக்கு குண்டாஸை நாட  வேண்டி வரும். என்னை உயிரை பாதுகாக்க சரியான வழி கொல்வது தான், இதை நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கருத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் .