மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது – தமிழக அரசு

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டெலிவரி செய்ய முடியாது என்று தமிழக அரசு பதில்.

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதனால் மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுக்கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படாது என்றும் தனி நபர்களுக்கு தான் மதுபானம் விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளது. மேலும் டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்