எனது திருமணத்தின் போது பாட்டியின் கிழிந்த சேலையை தான் அணிந்தேன்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை பதிவு திருமணம் செய்து கொண்டார்
தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையை தான் கட்டிக் கொண்டேன். திருமண வரவேற்புக்கு மட்டும் 10 ஆயிரத்திற்கு ஒரு டிரெஸ் எடுத்தேன் என கூறியுள்ளார்.
நமது நாட்டில் திருமணத்தை அதிக அளவு செய்து ஆடம்பரமாக, கடன் வாங்கி கூட விழாவாக எடுக்கின்றனர். இதை பார்த்து நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் எடுப்பதற்கே பயப்படுகிறார்கள்.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.