அசத்தலான அவல் பொரி உருண்டை செய்வது எப்படி?

நாம் நமது இல்லங்களில் அவளை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு, தற்போது இந்த பதிவில் சுவையான அவல் பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • அவல்பொரி – 1 கப்
  • வெல்லம் – ஒன்றரை கப்
  • பொட்டுக்கடலை – சிறிதளவு
  • வேர்க்கடலை – சிறிதளவு

செய்முறை

முதலில் வெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி, அதனை அடுப்பில் வைக்க வேண்டும். பின் பாகு வந்ததும், சுத்தம் செய்த அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை எல்லாவற்ரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பாகு சேர்த்து கலக்க வேண்டும். பின் இந்த கலவையை கையில் எண்ணெய் தேய்த்து விட்டு, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்பொது சுவையான அவல் பொரி உருண்டை தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.