கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்:அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது 2 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு …!

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள். கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது சாத்தூர் நகர காவல் நிலையத்தில் கர்ப்பிணி அளித்த புகாரில் 2 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Comment