வரலாற்றில் இன்று(04,02.2020)… இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனி மறைந்த தினம்..

  • மறை பரப்ப வந்தவர் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தால் தமிழ்புலவர் ஆன அதிசயம்.
  • அந்த அதிசயத்திற்க்கு சொந்தக்காரர் மறைந்த தினம் இன்று.

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கென்ஸ்டன் ஜோசெப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த ஒரு மத குரு ஆவார். இவர்  உலகம் முழுவதும் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், இவர்1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். கிறித்தவ மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி என அனைத்தையும் படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினையும் இவர்  தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். இவார்  23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.இவர்,  சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தமிழ்வளர்ச்சிக்கு பாடுபட்ட இவர், 1747ஆம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் தனது 67ஆம் அகவையில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

author avatar
Kaliraj