'ஹலோ 100! வரும்போது எனக்கு சரக்கு வாங்கிட்டு வாங்க!' – வடமாநில போலீஸை அலறவிட்ட இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோடார் எனும் ஊரை சேர்ந்தவர் உமா ஷங்கர், இவரது அப்பா அந்த ஊரில் மதுக்கடை வைத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் உமாசங்கர் மகன் சச்சின் , போலீஸ் அவரச அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்து மது வாங்கி வர சொல்லியிருக்கிறார்.
சச்சின் மேலும் கூறுகையில், ; இந்த ஊரில் எனது தாத்தாவின் மதுக்கடைதான் இருக்கிறது. அதனால், தனக்கு இங்கு மது தர மறுக்கிறர்கள். ஆகவே, நீங்கள் எனக்கு மது வாங்கி கொண்டு வாருங்கள். என கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் அந்த நம்பரை டிராக் செய்து உமாசங்கர் மகன் சச்சினை கண்டுபிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.