சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க மறுத்த கீதா கோவிந்தம் நடிகை ராஷ்மிகா மந்தானா!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வர வேற்பை பெற்ற கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா ஆவார்.இவரை தேடி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் தேர்வு செய்து தான் நடிக்கிறார்.
மேலும் இவர் தமிழில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் அந்த படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்றதும் தற்போது வேண்டாம் என சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிப்பதற்காக தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாம் என சொன்னதாக கூறியுள்ளார்.
தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாபாத்திரம் சரிஇல்லை என்றதும் மீண்டும் மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.