முன்பை விட அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுவருகிறார்!

  • இங்கிலாந்தில் தேர்தல் நடைபெற்ற 650 தொகுதிகளின் ரிசல்ட் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. 
  • அதில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது. 

இங்கிலாந்து நாட்டில் தற்போது தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ( பழமைவாத கட்சி ) சார்பாக போரிஸ் ஜான்சனும், இவருக்கு எதிராக தொழிலாளர் கட்சி சார்பாக ஜெரோமி கார்பைனும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிகொடிருக்கின்றன. அதில் முந்தைய தேர்தலை விட அதிக இடங்களை கைப்பற்றி ஆளும் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு பொறுப்பேற்று தொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பை ஜெரோமி கார்பைன் ராஜினாமா செய்துவிட்டர். இதன் மூலம், போரிஸ் மீண்டும் பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.