கஜா புயல் எதிரொலி …!மீட்பு குழுக்கள்,நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்போர் தயார்…!அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் குறித்த ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Image result for அமைச்சர் உதயகுமார்

இது தொடர்பாக  அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயல் குறித்த தகவல்களை அறிய 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும்.கஜா புயல் 3 முறை திசை மாறியிருக்கிறது, அதன் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.புயல் காலங்களில் வாகனங்களில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது பாம்பன் – கடலூர் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல்  மீட்பு பணிகளுக்காக 8 தேசிய பேரிடர் மீட்பு குழு, 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவ குழுக்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், படகுகள், நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்போர் தயார் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment