பூஜை, யாகத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது  -திருநாவுக்கரசர்

பூஜை, யாகத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது  என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது, ஆனால் தண்ணீர் பிரச்னை இல்லை என்று கூறுவது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். பூஜை, யாகம் நடத்தினால் நல்லது, அதற்காக பூஜை, யாகத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது. நிதியை ஒதுக்கி தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.