#BREAKING : ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரையா ? மருத்துவ குழு விளக்கம்

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது.ஆனாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கும் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் .ஆலோசனை நிறைவு பெற்ற பின்னர் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பொழுது அவர்கள் கூறுகையில்,தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம் .பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது, நோய் கண்டறிதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.